இந்திய இராணுவத்திற்கு மேலும் 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
CCS எனப்படும் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சில உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்திய இராணுவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 48 ஆயிரம் கோடி ரூபாயில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து நான்காம் தலைமுறை தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறிய போது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக 45 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பில் நான்காம் தலைமுறையான 73 தேஜாஸ் MK 1 A இலகு ரக போர் விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் MK 1 ரக போர் விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 48,696 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.