பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 கோடி மோசடி செய்த தர்விஸ் அக்தர், ரம்சியா பானு தம்பதி கைது
உத்தமபாளையத்தில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த உதயம் பைனான்ஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டது.. இந்த நிறுவனத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தும், ஏலச் சீட்டிலும் சேர்ந்து இருந்தனர்.
திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டதால் அதில் பணம் கட்டிய 500கும் மேற்பட்டோர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 40 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக தெரிய வந்ததுள்ளது.
இதனையடுத்து உத்தமபாளையத்தை சேர்ந்த தர்விஸ் அக்தர், அவர் மனைவி ரம்சியா பானு மற்றும் கோம்பையை சேர்ந்த கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.