மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த எல் முருகன் கடந்த சட்ட சபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதை தொடர்ந்து அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனார்.
தற்போது மத்திய செய்தி ஒளி பரப்பு துறை இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவரது பதவி காலமானது வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடை உள்ளது . இந்த சூழலில் அவர் மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது .
இந்நிலையில் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றதையடுத்து டெல்லியில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொண்டாடினார்.